search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பகம் வழக்கு"

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    ×