search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி கொலை வழக்கு"

    காதல் ஜோடி கொலை வழக்கில் கொலையாளி திவாகரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. #SuruliMalaiMurder #SC
    புதுடெல்லி:

    தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.



    இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திவாகருக்கு வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. #SuruliMalaiMurder #SC

    ×