search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் மிரட்டல்"

    • கல்லூரி மாணவி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் காதலன் மீது வழக்கு.
    • மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் தனியார் கல்லூரியில் பண்ருட்டியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் அமர்ந்திருந்தார். அப்போது மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார். அப்போது காதலன் நம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவேன்‌. மேலும் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மாணவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஷால், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×