search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் தலைமறைவு"

    வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை தேடி வருகிறார்கள். #girlmolestation

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்தரமேரூர் மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை எனக் கூறி அழைத்து சென்றனர்.

    குடும்ப வறுமையால் சிமியை வீட்டு வேலைக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த சிறுமி தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமையில் வேளாங்கண்ணியும், அற்புதராஜும் ஈடுபடுத்தியதாகவும் கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டிடம் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வேளாங்கண்ணியையும் அற்புதராஜுவையும் தேடி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில் வேளாங்கண்ணியின் கணவர் மறைவிற்கு பிறகு 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். அற்புதராஜின் சொந்த ஊர் நெமிலி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கோனேரி குப்பத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள்.

    இருவரும் கிராமங்களில் வறுமையில் உள்ள சிறுமிகளை கண்டறிந்து பணக்காரர்கள் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தொழிலை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியை போலீசார் கைது செய்தனர். மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் வன்கொடுமையில் எத்தனை சிறுமிகளை பயன்படுத்தினார்? யார்- யாருக்கு அவர்களை அனுப்பி வைத்தார்? இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கிறார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அற்புதராஜையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #girlmolestation

    ×