search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டில்"

    • சென்னிமலை அருகே கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. அவரது கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது. அந்த வழியாக சென்ற சிலர் பீடி, சிகரெட் பற்ற வைத்து விட்டு வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ×