search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஜிப்பூர்"

    உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi #Congress #Lollipop
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் காஜிப்பூர் பகுதியில் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மகாராஜா சுஹல்டியோவின் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை லாலிபாப்புடன் ஒப்பிட்டு பேசினார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் எனக்கூறி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.



    ஆனால், அங்கு 800 விவசாயிகளின் பயிர்க்கடனை மட்டுமே மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதுபோன்ற லாலிபாப் கம்பெனிகளை நீங்கள் நம்பவேண்டாம். விவசாயிகள் லாலிபாப்பை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரசின் கடுமையான நடவடிக்கைகளால் திருடர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்களின் பரிபூரண ஆசி தொடர்ந்து எனக்கு கிடைத்தால் போதும், அவர்களை சரியான இடத்தில் அடைக்க நடவடிக்கை எடுப்பேன் என குறிப்பிட்டார். #PMModi #Congress #Lollipop
    ×