search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவியரங்கம்"

    • தமிழ் மொழிக்கான பங்களிப்பை நினைவுகூறும் வகையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கிய கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் 'தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக உமறுப்புலவர், தாயுமானவர், சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள போப் ஜான்பால் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    இக்கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட த்திலுள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது.
    • கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது. இதையொட்டி கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌

    புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவளர் கௌரிசங்கர், நடராஜன், ஆசிரியர் பழனி சிறப்புரையாற்றினர். அறிவின் திறவுகோல் நூலகமே என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு பாவலர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் இளங்கோ கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார். நூலகர் சரவணன் வரவேற்றார். முடிவில் புலவர் நெடுமிடல் நன்றி கூறினார்.

    • 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல்.
    • காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சதயவிழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய நாள் அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

    தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளு வன் தொடங்கிவைக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது.பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை,

    பரதம், நாதசங்கமம், வயலின் இன்னிசை, கவியரங்கம் உள்ளிட்டநிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

    இரவு 8.30மணியளவில் நகைச்சுவை சிந்தனைப்பாட்டுபட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    சதய விழா நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7.30 மணிக்குமாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா,காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷே கம், பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.

    மாலையில் குரலிசை, திருமுறைப் பண்ணிசை அரங்கம், திருநெறி தமிழிசை நடைபெறவுள்ளன.

    இரவு 7 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயில் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர்
    சிவ. அமிர்தலிங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது.

    இதையடுத்து, இரவு 8 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரனின் நையாண்டி மேள நிகழ்ச்சி, ஆந்திரப் பிரதேச கல்பனா குழுவினரின் குச்சிப்புடி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அரண்மனைதேவஸ்தான பரம்பரைஅறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே,

    உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் மேத்தா, முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×