search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை"

    • சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வார்கள்.
    • போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர்.

    சென்னை:

    பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர்.

    வட மாநிலங்களில் செல்லும் ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வார்கள்.

    அதே போல் சென்னை ரெயிலிலும் பலர் ஏறி அமர்ந்து கொண்டனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அந்த பெட்டியில் பயணித்த புதுவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் கவர்னர் தமிழிசையை தொடர்பு கொண்டு கூறி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.

    உடனடியாக கவர்னர் தமிழிசை டெல்லியில் உள்ள ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

    அதிகாரிகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறிது நேரத்தில் அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர்.

    அதன் பிறகு பயணிகள் நிம்மதியாக பயணித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிய கவர்னர் தமிழிசைக்கு நன்றி தெரிவித்து அவர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்.

    • இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர்.
    • அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    சென்னை:

    வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர்.

    இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.

    இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள்.

    புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.

    இன்னும் அதைபற்றி சத்தம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும்தான் அறிவித்திருக்கின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும்.

    இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம்.

    ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று புதுவைக்கு வந்தார்.

    தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.

    அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    • புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.

    42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

    அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.

    • கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
    • கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.

    ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.

    தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

    எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.

    தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.

    கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

    அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.

    இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

    ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    • புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிர்வாழ்ந்தால்கூட கண்பார்வை போய்விடும். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நமது கடமை, பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும்.

    கள்ளச்சாராயம் புதுவையில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது.

    இந்த நிகழ்வுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அது கட்டுப்படுத்தப்படும். தவறான வழியில் தயாரிக்கப்படும் இத்தகைய போதை பொருட்கள் புதுவையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.

    தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.

    புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.

    இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன.
    • நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் வக்கீல் உதய்குமார் சாகர் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்பட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    இந்த மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

    • மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
    • விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.

    மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.

    கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.

    புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    • தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
    • மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பவுன்டேஷன், யூனிட்டி கட்டிடத்தில் இன்று சர்வதேச ஆன்மிக மாநாடு தொடக்க விழா நடந்தது.

    ஆரோவில் செயலர் ஜெயந்திரவி வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுவை கவர்னர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் இளைஞர்கள் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்ல வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக செயல்பட உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

    இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். புதுவைக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மீக பூமி.

    இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
    • தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும்.

    2 ஆண்டுகளுக்குப்பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்.

    சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

    தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    ×