என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதலி கடத்தல்"
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள அப்பாபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44). தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி (40). இவர்களது மகள் கமலி (16), நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நிலக்கோட்டை தோப்பு பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). ஆட்டோ டிரைவரான இவர் தினமும் கமலியை பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் வீட்டில் விடுவது வழக்கம். அப்போது முத்து லெட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத் தொடர்பாக மாறியது.
இது ராஜேந்திரனுக்கு தெரியவரவே கண்டித்துள்ளார். இதனால் பாலமுருகன் சம்பவத்தன்று முத்துலெட்சுமியையும், அவரது மகளையும் கடத்திச் சென்று விட்டார். தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போனது கண்டு திடுக்கிட்ட ராஜேந்திரன் பல இடங்களில் தேடிப்பார்த்தார்.
அதன் பிறகு பாலமுருகன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ் பெக்டர் ராஜூ வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பெண்களையும் அவரை கடத்தச் சென்ற ஆட்டோ டிரைவரையும் தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் விஜய்ராஜேஷ் குமார் (வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாழினி (30). இவர் தஞ்சை அண்ணா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் யாழினி சென்னை தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார். அதே வகுப்பில் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் (30) படித்து வந்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம், யாழினியின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் கண்டித்து வந்தார். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் யாழினி ரித்தீசுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விஜய்ராஜேஷ் குமார், யாழினியை சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு யாழினி, தாய் வீடான தஞ்சை பர்மா காலனிக்கு 2 குழந்தைகளுடன் வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த யாழினியை காணவில்லை. இதுபற்றி அவரது கணவர் விஜய்ராஜேஷ் குமார் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதில, தனது மனைவி யாழினியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரீத்தீஷ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சுனில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரின் மகன் கள்ளக்காதலியை கடத்தி சென்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்