என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி நிர்வாகம்"
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் கார்த்திகேயன் (19). வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும், அதே கல்லூரியில் படித்து வந்த மற்றொரு மாணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கார்த்திகேயனை அழைத்து விசாரணை நடத்தியது. பின்னர் நீ தேர்வு மட்டும் எழுதலாம். டி.சி.யை வாங்கி சென்று விடு என்று கூறினர். தன்னை பய முறுத்துவதற்காகத்தான் எழுதி வாங்குகிறார்கள் என நினைத்து கார்த்திகேயனும் எழுதி கொடுத்துள்ளார்.
பின்னர் தேர்வு எழுத ஹால் டிக்கெட்டை வாங்கி சென்றார். நேற்று கல்லூரிக்கு சென்று ஒரு தேர்வும் எழுதினார். மதியம் வீட்டுக்கு வந்த கார்த்திகேயனுக்கு ஒரு தபால் வந்தது. அதை பிரித்து படித்த போது கல்லூரி நிர்வாகம் தனக்கு டி.சி. அனுப்பி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதை கண்ட அவரது தாயார் சந்திரா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்