search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லறை"

    • மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது
    • இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது

    நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். 

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • திருமணம் ஏக்கத்தில் விஷம் குடித்தார்
    • நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்றை பகுதியைச் சேர்ந்தவர் சிவநாடான். இவரது மகன் பிரபு (வயது37).

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊருக்கு திரும்பினார். பின்னர் வெளிநாடு செல்லவில்லை. அவருக்கு திருமணமும் நடக்கவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக பிரபு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு தனது வீட்டருகில் உள்ள தாயின் கல்லறையருகே விஷம் அருந்தி வாந்தி எடுத்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் ஜெகன் மணவாளக் குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது.
    • கல்லறைகள் தூய்மை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையர்களின் நினைவு கூறப்படும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்–பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களைநினைத்து வழிபடுவார்கள்.

    கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளில் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது. திருப்பலியில் பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மீக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்கள்.

    திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் பேராலயத்தின் உள்ளே அமைந்துள்ள லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லூர்து சேவியர் கல்ல–றையை பேராலய அதிபர் சாம்சன்புனிதம் செய்து வழிபட்டார்.

    அதனை தொடர்ந்து புள்ளி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறை புனிதம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூண்டி பேராலய இணைந்து உள்ள கிராமங்களில் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள்புனிதம் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்து வெடிவெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

    • தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.
    • ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை வி.ஐ.பி காலனி சேர்ந்தவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா. வயது மூப்பின் காரணமாக கடந்த ஜூன் 12-ம் தேதி அவர் இறந்தார்.

    அந்த சமயத்தில் தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதி சிறிய இடமாக இருந்ததால் யாரும் அங்கு கல்லறை கட்ட அனுமதி வழங்கவில்லை. ஆனால் பிரவீன் சாமுவேல் மற்றும் குடும்பத்தினர் தனது தந்தைக்கு கல்லறை கட்ட விரும்பினார்.

    இதற்காக ஊட்டியில் இவர்களது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது. தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.

    மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பலகட்ட விசாரணைக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது. இதனை அடுத்து 3 மாதங்களுக்கு பின்பு நேற்று வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்குகொண்டு செல்லப்பட்டது.

    அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பிரவீன் சாமுவேல் கூறும் போது, தந்தைக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    • தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது.
    • கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 70). திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

    இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    கடந்த 12-ந் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×