search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆலோசனைக் கூட்டம்"

    • கிராம ஊராட்சித் தலைவா்களுடன் கலெக்டர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற பணியாற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், கிராம பகுதிகளில் விழா கொண்டாடுவது குறித்து ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் விதமாகக் கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொடிகள் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவா்கள் தலைமையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்று காலை தேசியக்கொடியை உரிய மாண்புடன் ஏற்ற வேண்டும்.

    தேசியக் கொடியை ஏற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகளை ஊராட்சித் தலைவா்கள் முன்னின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆக. 15 ஆம் தேதி மாலை 6 மணி வரை பறக்கவிட வேண்டும். பின்னா், மாலை உரிய மரியாதையுடன் கொடியை இறக்க வேண்டும்.

    சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கடந்த 31 ஆம் தேதி வரை மேற்கொண்ட வரவு செலவுகள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அமைக்க வேண்டும். சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற ஊராட்சித் தலைவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

    ×