search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அறிக்கை"

    • தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    • சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, ஊதியம், குழந்தைகளுக்கான கல்வி அனைத்தும் சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்துதல் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகிறது. இவை அனைத்தும் வதந்திகள் ஆகும்.

    பிற மாநில தொழிலாள ர்களுக்கு குறைகள் மற்றும் புகார்களை தீர்ப்பதற்கு கிருஷ்ணகிரி கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவரின் தெலைபேசி 9500014446 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    மேலும், பிற மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முழு நேரம் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் Toll Free No. 1077 அல்லது தொலைபேசி எண். 04343-234444 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அறையை தொடர்பு கொள்ளலாம். அதன் தெலைபேசி எண்கள். 9498181214, 9498169703, 9498139505.

    வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×