search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அரசியல்"

    மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Yeddvurappa #BJP

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.

    நீர்பாசன துறை மந்திரியாக டி.கே. சிவக்குமார் உள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகித்தார்.

    இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரை முன்னாள் முதல் மந்திரியும், கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் மாற்றம் இருப்பதாகவும், பாரதிய ஜனதாவில் வந்து சேரும்படி டி.கே.சிவக்குமாருக்கு, எடியூரப்பா அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    முதல் மந்திரியாக உள்ள குமாரசாமி இருதய கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. மீண்டும் அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் அவர் முதல் மந்திரி பொறுப்பை, காங்கிரசை சேர்ந்த துணை முதல் மந்திரி பரமேஸ்வராவிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


     

    முதல் மந்திரி பொறுப்பை சகோதரர் ரேவண்ணா அல்லது மனைவி அனிதா குமாரசாமி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைக்க குமாரசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மந்திரி டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் எடியூரப்பா திடீரென்று டி.கே.சிவக்குமாரை சந்தித்தது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரசாமி சிகிச்சைக்கு செல்ல முதல் மந்திரி பொறுப்பை ஒப்படைக்க ஆதரவு கொடுக்க கூடாது என்று டி.கே. சிவக்குமாரை எடியூரப்பா வலியுறுத்தியதாகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க போவதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #Yeddvurappa #BJP

    அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார். #Mayawati #karnatakapolitical #supremecourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில அரசியலில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

    அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதைவிட, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.  #Mayawati #karnatakapolitical #supremecourt
    கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், ‘இன்று பண அதிகாரத்தை மக்களின் தீர்ப்பு வெற்றி கண்டுள்ளது. பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அரசியலை வியாபாரமாக்க விரும்பாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாடம் கற்றுள்ளனர்.

    எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Centralgovtshouldresign #AkhileshYadav 
    ×