search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணை கொலை"

    • ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அருகே குட்டப்பட்டி அம்மன் கோவிலூரை சேர்ந்தவர் ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    என் மனைவி லட்சுமிக்கு 65 வயதாகிறது. நரசிம்மன், வெங்கடாஜலபதி,கிருஷ்ண மூர்த்தி என 3 மகன்கள் உள்ளனர். குட்டப்பட்டி கிராமத்தில் 4.79 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தை எனக்கு, மகன்களுக்கு என 4 பாகங்களாக பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மோசடி

    இதற்காக மேச்சேரி சார்பதிவாளர் அலுவ லகத்துக்கு சில வருடத்திற்கு முன்பு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    10½ சென்ட் நிலத்தில் நான் குடியிருந்து வரும் நிலையில் அதில் உள்ள பழைய வீடு அவர்களுக்கு பாகமாக காண்பித்து என்னை மோசடி செய்துள்ளனர். பத்திரப் பதிவு செய்யும்போது படித்து பார்க்க வில்லை. எனது பாகத்தை சரிவர ஒதுக்கீடு செய்யாமல், அவர்கள் மட்டுமே பிரித்து கொண்டு என்னை மோசடி செய்துள்ளனர்.

    இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தோம். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி மாதம் தோறும் எனக்கும், மனைவிக்கும் 3000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டனர்.

    கருணை கொலை

    இதையடுத்து வீட்டிற்கு வந்த எனது மகன்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். நான் பணம் தர முடியாது என மிரட்டுகின்றனர். தற்போது உணவுக்கு வழியில்லாமலும் மருந்து, மாத்திரை வாங்கக்கூட பணம் இல்லாமல் நானும், மனைவியும் அவதியுற்று வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாள்தோறும் உணவு அருந்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ செலவிற்கு பணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    • வீட்டிற்கு செல்ல வழி இன்றி தவிப்பதாக கூறி கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
    • ஆசிரியை ஒருவர் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க கோரி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், கொரிசபாடு மண்டலம் போடுவானிபாலத்தைச் சேர்ந்தவர் சுதாராணி. இவர் அத்தங்கி மண்டலம், கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, தனது வீட்டுக்குச் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

    இதனால் வீட்டிற்கு செல்ல வழி இன்றி தவிப்பதாக கூறி கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். மனு அளித்த பிறகும் பிரச்சினை தீரவில்லை.

    இதையடுத்து சுதா ராணி தனது மகன், மகளுடன் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை சுதா ராணி கொடுத்தார்.

    நான் ஏற்கனவே மனு அளித்தபோது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறி இருந்தார். மனுவை படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியையின் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆசிரியை ஒருவர் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க கோரி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
    • தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொ ணவக்கரை ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக துரைராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறாா். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஊராட்சி நிா்வாகம் கடந்த பல மாதங்களாக தனக்கு ஊதியம் தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடா்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கொணவக்கரை ஊராட்சியில் 1997-ம் ஆண்டில் நிரந்தரப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். எனக்கு ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நான் அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்க ப்பட்டேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை எனது குடும்பத்தாா் மைசூரு அழைத்து சென்று 2 மாதங்கள் மருத்துவமனை யில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக எனக்கு ஊராட்சி நிா்வாகம் ஊதியம் அளிக்கவில்லை. இதனால், மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்லவோ முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எனவே, என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்து தூய்மை பணியாளர்ஒருவர் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது. 

    • சொத்தை மீட்டு தர வலியுறுத்தல்
    • புற்று நோயால் அவதி- கண்பார்வை இழந்ததால் விரக்தி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்த தர்மன். இவரது மனைவி சின்னகுழந்தை (வயது95) தம்பதிகளுக்கு நடராஜன் ராஜேந்திரன் குமரேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் தர்மன் ஏற்கனவே இறந்துவிட்டார். குமரேசன் நடராஜன் ஆகியோரும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் சின்னகுழந்தை வசித்து வருகின்றார்.

    தற்போது ராஜேந்திரனுக்கு போதிய வருமானம் இல்லாததால் சின்னகுழந்தைக்கு, வரும் முதியோர் உதவி தொகை வைத்து பிழைப்பை நடத்தி வருகின்னர்.

    மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும் கண்பார்வை இழந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் சின்னகுழந்தை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஆண் நண்பருக்காக பெண் ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்துள்ள இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    டெல்லியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால் அவருக்கு நரம்பு அழற்சி ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

    அவருடைய வேலைகளை கூட அவரால் செய்ய முடியவில்லை. 2014-ம் ஆண்டு முதல் அவர் இந்த நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவர் ஐரோப்பிய நாட்டுக்கு சென்று அங்கு கருணை கொலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் சிகிச்சைக்கு செல்வதாக கூறி விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளார்.

    அவ்வாறு அவர் வெளிநாடு சென்றால் அவரது குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே அவருக்கு வெளிநாடு செல்ல விசா வழங்ககூடாது. மேலும் அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க ஒரு குழுவை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ஆண் நண்பருக்காக பெண் ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்துள்ள இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×