search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்"

    உழைப்பு மற்றும் சுயமரியாதையை கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது;

    கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்

    தேர்தல் வரும்வரை நாம் காத்திருப்போம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நமது உழைப்பு மற்றும் திறமையை வெளிக்காட்டுவோம். பதவி ஆசை காட்டி, தனது ஆதரவாளர்களை ஸ்டாலின் தரப்பினர் இழுக்க முயல்கிறது.

    தொண்டர்களுக்காக பேசிய என்னை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார்கள், பதவிக்கு ஆசைப்பட்டவர்களே ஸ்டாலினுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    ×