search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தோலிக்க திருச்சபைகள்"

    கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார்.
    வாடிகன் சிட்டி :

    ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் உலக அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது போப் ஆண்டவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

    எனவே பாதிரியார்களின் இத்தகைய பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார். அதன்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.

    மேலும் பாதிரியார்களின் பாலியல் சுரண்டல் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்கு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
    ×