search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் மீது வழக்கு"

    • 54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்க புரத்தை சேர்ந்தர் கிருத்திகா. இவருக்கும் தூத்துக்குடி கீழக்கரந்தை செங்கோட் டையை சேர்ந்த மணி கண்டன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கிருத்திகா விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனவே திருமணத்தின் போது 54 பவுன் நகை, வைர மோதிரம், திருமண செலவு ரூ.5 லட்சம் ஆகி யவை கணவர் மணிகண்டன் வீட்டாருக்கு வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தோம். அங்கு கணவர் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    எனக்கு கொடுத்த 50 பவுன் நகையில் பாதியை அவரது சகோதரிக்கு கொடுத்து விட்டார். மேலும் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து பட்டினி போட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு அவரது தாய் பொன்னுத்தாய், சகோதரி கோகிலா உடந்தையாக இருந்தனர்.

    இந்த நிலையில் என்னை, எனது தாய் வீட்டில் விட்டு விட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என கூறி கணவர் சென்றுவிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்வர்களின் மீது நடவ டிக்கை எடுக்குமாறு போலீ சாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.
    • மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி முந்தல் காலனியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 35). இவருக்கும் சிவகாமி (27) என்பவருக்கும் 13 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷன் (7), நேத்ரா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். லெட்சுமணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    சிவகாமி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.

    மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டு ள்ளனர். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. யாரைக் கேட்டு லோன் வாங்கினாய்? அந்த பணத்தை கட்ட முடியாதா? என கேட்டு சிவகாமியை கத்தியால் இடுப்பு, தொடை, முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவகாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெ க்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • கணவர் அசோக்குமார் மாமனார் மரியசவரி, மாமியார் பாத்திமா மேரி, அசோக்குமாரின் சகோதரர்கள் பீட்டர் வினோத், வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த மரியசவரி மகன் அசோக்குமார். இவருக்கும் மெர்சிலின் கிரிஜா என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 4ந் தேதி திருமணம் நடந்தது.

    கிரிஜா கருவுற்றிருந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டுமென கணவர் குடும்பத்தினர் கூறி வந்துள்ளனர். ஆனால் கிரிஜாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    குழந்தை பிறந்த விபரம் அறிந்தவுடன் அவர்கள் கிரிஜாவை சந்திக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கு சென்ற கிரிஜாவை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

    அவர் கதறி அழுதபோதும் கேட்காமல் இனிமேல் வீட்டில் இருந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிரிஜா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கணவர் அசோக்குமார் மாமனார் மரியசவரி, மாமியார் பாத்திமா மேரி, அசோக்குமாரின் சகோதரர்கள் பீட்டர் வினோத், வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×