search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் படுகாயம்"

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கைத்தறி தொழிலாளி. இவரது மகள் கவிதா(வயது 29). இவருக்கும், குஞ்சுவெளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சீமானுக்கும்(34) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

    இதனால், சீமான் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். குழந்தை இல்லாத ஏக்கம் ஒரு புறம், கணவருடன் பிரச்சினை என கவிதா தவித்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த அவர், ஆறுதலுக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், ராமலிங்கம் தனது வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் மகள் கவிதா, மருமகன் சீமானை குடி வைத்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீமான் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்து, கவிதாவிடம் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த கவிதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடி வந்து சீமான், கவிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கணவன்-மனைவி இருவர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவிதா மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தீக்குளித்ததால் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயமடைந்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 35), விவசாயி. இவரது மனைவி காசியம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காசிதுரை (2) என்ற மகன் உள்ளார். 

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காசியம்மாள்  வீட்டிலிருந்த மண்எண்ணையை  உடலில் ஊற்றி  தீவைத்துக் கொண்டார். உடலில் தீபற்றியதால் அலறிய மனைவியை  ஓடிச்சென்று செல்லத்துரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் காரைக்கால் மதகடி தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மபிரபு. இவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னத்தூர் வளைவு அருகே மணல் டிராக்டர் வந்து கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்குநேர் மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே அமுதா தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த அவரின் கணவர் தர்மபிரபுவை அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் தம்பிக்கோட்டை மேலக்காடை சேர்ந்த முருகானந்தம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×