search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவரிடம் போலீஸ் விசாரணை"

    இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையை அடுத்த வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். டெம்போ டிரைவர். இவரது மனைவி ரதி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரதி பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக கணவரிடம் கேட்டார். ஆனால் மணிகண்டன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த ரதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரதி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை தங்க பாண்டியன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் சாவிற்கு மருமகனே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

    மாமனார் தன்மீது போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மணிகண்டன் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் நேற்று மாலை வக்கீல் ஒருவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் போலீசாரிடம் தனது மனைவி சாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 7 வருடம் முடியாததால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    பலியான ரதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் ரதியின் சாவிற்கான காரணங்கள் தெரியவரும்.
    ×