என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கணவன் கொல்ல முயற்சி
நீங்கள் தேடியது "கணவன் கொல்ல முயற்சி"
புரோட்டா சால்னாவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மாடசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்று புரோட்டா சால்னாவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து மாடசாமிக்கு இந்திரா கொடுத்தார். பின்னர் உணவில் மருந்து வாசனை வருவதை அறிந்த மாடசாமி அவரிடம் கேட்டபோது, விஷம் கலந்திருப்பது உறுதியானது. பின்னர் மாடசாமி அக்கம் பக்கத்தினரிடம் விபரத்தை கூறினார்.
உடனடியாக அவர்கள் சோப்பு கரைசலை அவருக்கு கொடுத்து முதலுதவி செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்வார். மேலும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். இதில் ஆத்திரமடைந்த நான் அவருக்கு சால்னாவில் விஷம் கலந்து கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் இந்திராவை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மாடசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்று புரோட்டா சால்னாவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து மாடசாமிக்கு இந்திரா கொடுத்தார். பின்னர் உணவில் மருந்து வாசனை வருவதை அறிந்த மாடசாமி அவரிடம் கேட்டபோது, விஷம் கலந்திருப்பது உறுதியானது. பின்னர் மாடசாமி அக்கம் பக்கத்தினரிடம் விபரத்தை கூறினார்.
உடனடியாக அவர்கள் சோப்பு கரைசலை அவருக்கு கொடுத்து முதலுதவி செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்வார். மேலும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். இதில் ஆத்திரமடைந்த நான் அவருக்கு சால்னாவில் விஷம் கலந்து கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் இந்திராவை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X