search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம் திறப்பு"

    • திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாதன், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, துணைப்பதிவாளர் ஆவின் இரா. கணேசன், வடக்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.
    • விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் தனது சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் 1.3கோடி ரூபாய் செலவில் திருக்கழுக்குன்றம் அடுத்த குண்ணவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் அதற்கு தேவையான நாற்காலிகள், மேஜைகள் வழங்கவும் முடிவு செய்தது. அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.

    விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் சுபா மூர்த்தி, வாசுதேவன், ஜெகன், ரவிச்சந்திரன், சின்ன கோவிந்தன், குண்ணவாக்கம் ஊராட்சி தலைவர் நித்தியானந்தம், தலைமை ஆசிரியை தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார்.
    • சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பரந்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்கூடமும், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையும், அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவேடல் கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார். அதன்படி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது

    க.செல்வம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம். பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய கவுன்சிலர் லோகுதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்திவாக்கம் குமார், சிங்காடி வாக்கம் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பழனி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கட்ராமன், கவிதா டில்லி பாபு, ஒன்றிய பொருளாளர் வேளியூர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், தண்டலம் பார்த்திபன், திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ஊர் பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த காரணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில், சுயாட்சி திட்டம் (ஆர்.ஜி.எஸ்.ஏ) 2021-2022 நிதியின் கீழ், ரூ.24.54லட்சம் செலவில் கூட்ட அரங்கம், தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர் அலுவலகம் உள்ளிட்ட அறைகளை கொண்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.

    பணிகள் நிறைவடைந்த நிலையில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி, ஒன்றிய கவுன்சிலர் வினோத், அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • பல் நோக்கு மைய கட்டிடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஏற்பாடு

    ஊட்டி

    குன்னூா் ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நகா்ப்புற ங்களின் வளா்ச்சிக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் வளா்ச்சிப் பணிகள் மேம்பட வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதற்கேற்ப இளித்தொ ரை கிராம மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பல்நோக்கு மைய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், குன்னூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சுனிதா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவா் முருகன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    ×