search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட காண்டிராக்டர் கொலை"

    • ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார்.
    • ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ்(வயது 63). கட்டிட காண்டிராக்டர்.

    கடந்த 22-ந்தேதி காலை ஜேக்கப் ஆனந்தராஜ் டவுன் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட பணிகளை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' ஆகியிருந்தது.

    இதுகுறித்து அவரது மகள் ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் குளக்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நடத்திய விசாரணையில், பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தேவி(32) என்பவரும், அவரது கள்ளக்காதலனான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து ஜேக்கப் ஆனந்தராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலைக்கான காரணம் குறித்து தேவி போலீசாரிடம் கூறியதாவது:-

    ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார். அப்போது அவருக்கு எனது தாயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனது தாய் மூலம் கிடைத்த அறிமுகத்தால் ஜேக்கப் ஆனந்தராஜ் என்னிடம் நெருங்கி பழகினார்.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜேக்கப் ஆனந்தராஜின் அறிமுகம் கிடைத்ததால் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தோம். நாங்கள் 2 பேரும் அடிக்கடி காரில் வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.

    எனக்கு ஏற்கனவே சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்புடன் தொடர்பு இருந்தது. அவரும் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த விஷயம் ஜேக்கப் ஆனந்தராஜிக்கு தெரியாது.

    கடந்த 22-ந்தேதி பிரின்ஸ் ஜேக்கப்பும், நானும் எனது வீட்டில் உல்லாசமாக இருந்தோம். அப்போது அங்கு ஜேக்கப் ஆனந்தராஜ் திடீரென வந்தார். அவர் என்னை உல்லாசத்திற்கு அழைத்ததால், பிரின்ஸ் ஜேக்கப்புக்கு கோபம் வந்தது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே பிரின்ஸ் ஜேக்கப் ஆத்திரத்தில் ஜேக்கப் ஆனந்தராஜை மிதித்து கீழே தள்ளினார். நான் அவரது கைகளை பிடித்து கொண்டேன். பின்னர் பிரின்ஸ் ஜேக்கப் அங்கு கிடந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தோம். மறுநாள் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குளக்கரையில் அவரது உடலை மொபட்டில் எடுத்து சென்று வீசினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தேவி கூறியவற்றை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×