search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டி தர"

    • கொடுமுடி அருகே இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சுள்ளிமடை பகுதியில் இருந்து குதிரைக்கல் மேடு பகுதி வரை கீழ்பவானி வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலில் சுமார் 12 அடியில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பாசனம் செய்து வந்தார்கள்.

    மேலும் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசா ம்பாளையம், பழனியாண்ட வர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனை தெடர்ந்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் பாலத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அடைப்பை எடுத்து சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.

    இடிக்கப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித் தர இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல முறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×