search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண பாக்கி"

    • கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது
    • சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம் என கூகுள் தெரிவித்தது

    இணையதள தேடல் இயந்திரங்களில் (search engines), உலகின் முன்னணியானது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்."

    உலகெங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பயனர்கள் தங்கள் ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் வகையில் அவர்கள் நிறுவன மென்பொருள் "ஆப்" (app) எனப்படும் செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் பதிவிறக்க தளமான "ப்ளே ஸ்டோர்" எனும் தளத்தில் கட்டமைத்து இருந்தன.

    ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று, கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    கூகுள் நிறுவனம் அறிவித்ததாவது:

    எந்த விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றங்களோ, கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்திற்கு உள்ள உரிமையை தடை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இல்லை. எங்களுக்கு உரிமையள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிக்கள், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம்; ஆனால், அவை கட்டணத்தை கட்ட தவறின. எனவே, அவற்றை நீக்கி விட்டோம்.

    இவ்வாறு கூகுள் தெரிவித்துள்ளது.


    ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான "நவுக்ரி.காம்" (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான "நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்" (99acres.com), திருமண சேவைக்கான "பாரத்மேட்ரிமோனி.காம்" (bharatmatrimony.com) மற்றும் "ஷாதி.காம்" (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.

    பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் (Murugavel Janakiraman), "இது இந்திய இணைய சேவை காலகட்டத்தில் ஒரு கருப்பு தினம்" என கூறினார்.

    "இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு "ஆப் ஸ்டோர்" (app store) தேவை" என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) தெரிவித்தார்.

    இந்நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டண பாக்கியை செலுத்தும் வரை, இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.

    • பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
    • மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார். 

    ×