search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையடைப்பு"

    • புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
    • அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

    மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    • ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு
    • சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் ஜெயின் சங்கத்தினர் கடை அடைப்பு அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயின் சங்க நிர்வாகிகள் கமல் கிஷோர் ஜெயின், தீபக்குமார், சர்ஜன்ராஜ், சூரஜ்மல், ஜினேந்திரகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில் ஜார்கண்ட் மாநிலம் சிக்கர்ஜி மஹா தீர்த்தம் (பரஷ்வநாதர்) மற்றும் குஜராத் மாநிலம் சத்துருஞ்சை மஹா தீர்த்தம் (ஆதிநாதர்) ஆகிய ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 6-1-2023 ஒரு நாள் மட்டும் சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    • ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    • குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

    பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

    இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • வருகிற 17-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சாலைகளை சீரமைக்க கோரியும், திட்டப்பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.

    நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடுதலும் இன்றி நடந்து வருகிறது. மக்களும் இதனால் பரிதவித்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே நகரில் சாலைகளை சீரமை க்க கோரியும், திட்டப்பணிகளை துரி தமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்து வது என முடிவு செய்ய ப்பட்டது. இதற்கு அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவலை ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

    • கரூரில் நாளை முழு கடையடைப்பு நடைபெற உள்ளது
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து

    கரூர்:

    ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள், கடைகள், மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், மண்டி கடைகள் நாளை முழு கடையடைப்பு செய்கின்றன. மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதித்திருப்பது சாமான்ய மககளை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்கம், உணவு தானிய மண்டி (வணிக வளாகம்) கரூர், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லரை வியாபாரங்கள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய மண்டி (வணிக வளாகம்) ஆகிய நிறுவனங்கள் நாளை (16-ந் தேதி) ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. 

    • அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரைசாமி, தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் கே.சி.எம்.துரைசாமி கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து நாளை (சனிக்கிழமை) அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். நாளொன்றுக்கு அரிசி ஆலையில் 25 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடைகளில் 30 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். அவை வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும்.
    • கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    நாகப்பட்டனம்:

    கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள், லயன்ஸ் கிளப், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம், நாகை இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம், மீனவ கிராம பஞ்சாயத்தாரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    உடனடியாக காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.

    ×