search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் உயர்வு"

    • மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் சமீபத்தில் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சாப்பாட்டுக்கு ரூ.10-ம், பொங்கலுக்கு ரூ.5-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உணவின் அளவும் குறைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.

    ஒருவர் ஒருவேளை உணவுக்கு ரூ .100 செலவழித்தால்தான் பசி தீரும் எந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் சில ஓட்டல்களில் சாப்பிடும் உணவுக்கு ஜி.எஸ்.டி. வரியும் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வயிறாற உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ரூ.20 மதிப்புள்ள உணவு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் உணவுக்கு முன்பு ரூ.60 வரை செலவிட வேண்டிய நிலைமை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த நிலையில் ஓட்டல்களில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாகி உள்ளது. வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி பார்சல் செய்து வழங்குகின்றனர். இது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பல ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தரமான வைகளா?என்பது தெரியவில்லை.

    எனவே உணவு பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×