search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்படை அதிகாரி மரணம்"

    • கடற்படை தளத்தில் ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ்குமார் பட்ரோ.
    • கடற்படை அதிகாரிகள் குழுவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ்குமார் பட்ரோ, லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வந்தார். இவர் கடற்படை தளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும், கொச்சி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடற்படை அதிகாரிகள் குழுவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொச்சி கடற்படை தளத்தில் கடந்த ஆண்டும் இதுபோல மாலுமி ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    ×