என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கஞ்சா விற்ற கும்பல் கைது
நீங்கள் தேடியது "கஞ்சா விற்ற கும்பல் கைது"
- போடேந்திரபுரம் மயான அணைமேட்டு பகுதியில் வீரபாண்டி போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்ற கும்பலை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி அருகே போடேந்தி ரபுரம் மயான அணைமேட்டு பகுதியில் வீரபாண்டி போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசோக்குமார் (வயது21) என்பவர் கஞ்சாவுடன் வந்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சூர்யா (22) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபி, விக்னேஷ், புவனேஸ்வரன் ஆகியோரை தேடி வரு கின்றனர்.
உத்தமபாளையம் போலீ சார் சின்னமனூர் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைக்கில் கஞ்சா கடத்திய கம்பத்தை சேர்ந்த படித்துரை (40), உத்தமபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மலைச்சாமி என்பவரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X