search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கும்பல்"

    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு
    • கன்னியாகுமரியில் நள்ளிரவில் பரபரப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கஞ்சா கும்பல்களை ஒழிக்க ேபாலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கன்னியாகுமரி சுனாமி காலனியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் சுனாமி காலனியை சேர்ந்த ஆக்னல் (வயது20) என்ற வாலிபரை, எதிர் தரப்பை சேர்ந்த ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் தப்பிய அந்த கும்பல், கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் பகுதி யில் உள்ள ஒரு வங்கி முன்பு வந்து நின்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் அனுப்ப கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த மீனவர் மோகன் தாஸ் என்பவர் வந்தார்.

    அவரை கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆக்னல், மோகன்தாஸ் ஆகிய இருவரும் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இருவர்களிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னல் மற்றும் மோகன் தாஸ் இருவரையும் மீண்டும் தாக்க வந்த ஜெப்ரினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று கீழே விழுந்து காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக கன்னியா குமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு கஞ்சா போதையில் இருந்த அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மிரட்டல் விடுத்து பேசி ரகளையில் ஈடுபட்டார். சிகிச்சை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.
    • தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் எள்ளுக்காடு தோட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சபரி, சியாம் என்ற 2 வாலிபர்கள் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயம் எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் கேட்ட போது தற்போது சீசன் இல்லை, மழை சீசனில் விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது அருகில் வசிக்கும் சிலருடன் நட்பாக பழகி அவர்களையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில் அந்த கும்பல் மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஹாசிம் (வயது 39), அதே பகுதியை சேர்ந்த விபின் தாஸ்(29) ,சிவகங்கையை சேர்ந்த செல்வ கணபதி(27) , அருள்புரம் நவீன் ஆனந்த் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 5 அரிவாள்,1 துப்பாக்கி. 11 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 200 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாக உள்ள சபரி, ஷியாம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மீது கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. எதிர்தரப்பினர், நீதிமன்றத்தில் வைத்து இவர்களை கொல்ல முயன்றதால் அங்கிருந்து தப்பி, விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், தங்களது பாதுகாப்புக்கும் வைத்துக்கொண்டதுடன் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×