search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய் இறக்குமதி"

    ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதிஅரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #SaudiArabia

    வாஷிங்டன்:

    ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது.

    அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.

    இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்தது. இக்கெடு மே 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.


    அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.

    ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 65 டாலராக உள்ளது. அது 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது.

    இது இந்தியாவின் அனைத்து பொருளாதார நிலைகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதன் தாக்கம் தற்போதே தொடங்கிவிட்டது. நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்துவிட்டது.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DonaldTrump #SaudiArabia

    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்துள்ள நிலையில், இந்தியா மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியிருக்கிறது. #IranOilimports
    புதுடெல்லி:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்த நாட்டை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக, நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது, இதை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என நிர்பந்தம் செய்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடான இந்தியாவுக்கு, அமெரிக்காவின் இந்த நிர்பந்தம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வரைவுத் திட்டத்தை தயாரிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சவுதி மற்றும் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதேசமயம், டாலருக்குப் பதிலாக ரூபாயில் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை ஈரான் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஈரானிடம் இருந்து நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேச நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியா பல்வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்கா ஏற்றுமதி செய்தாலும் இந்திய கம்பெனிகள் முதல் ஆளாக வந்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். #IranOilimports #Indiaoilimports

    ×