search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுனர் பதவி"

    • இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ண ப்பங்கள் 30.6.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

    கொரோனா பெருந்தோற்று காரணமாகக் அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 13.9.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

    அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்த ப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேற்காணும் தகுதியுடை யவர்கள் தங்களின் விண்ண ப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2-வது தளம், செந்தில்பைப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டி ப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×