search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓகியோ"

    அமெரிக்காவில் டிரைவராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Sikhkilled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தின் மான்ரோ பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் சரக்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், மே 12-ம் தேதி புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்ற வாலிபர் இவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ராபர்ட் வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்ட ஜஸ்பிரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரீத் சிங், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் மீது கொடூரமான கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sikhkilled
    ×