search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழிப்பு பணி"

    விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #Dengue
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு சாலை, ஊரல்கரைமேடு, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? எனவும் பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
    ×