search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒர்க்ஷாப்"

    பெரியகுளம் அருகே ஒர்க்ஷாப்பை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள மேல் மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 41). இவர் தாமரைக்குளம் செல்லும் சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஒர்க்ஷாப் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டிரில்லிங் மிஷின், கட்டிங் மிஷின், வெல்டிங் மிஷின், பைப் ரிஞ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து பிரகலாதன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் பனி காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இதனை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.

    எனவே இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×