search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருவர்"

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
    • இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள்

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவாலயம் அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர், கடந்த 16-ந்தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கொலை யாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் ராஜ்குமா ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே சூப் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தி ருப்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக புது குடியிருப்பைச் சேர்ந்த பிரவீன் (23), அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ராம சித்தார்த் (26)ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீ சார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் ராமன் புதுரை சேர்ந்த ஜெபின் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட ஜெபினை ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினார்கள்.

    அப்போது தனது நண்பர் அழைத்ததால் அவருடன் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட ஜெபினை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியாதல் ஒருவர் பலியானார்.
    • அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் உருக்குலைந்த ஆண் சடலம் கிடந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதியதில், உடல் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

    இதுகுறித்து ச.வாழப்பாடி வி.ஏ.ஓ. பெரியசாமி, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் உருக்குலைந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    விபத்தில் சிக்கி இறந்தவர் யார்? விபத்திற்கு காரணமான வாகனம் எது? என்பது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×