search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரத்துப்பாளையம்"

    • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்ற ப்பட்டது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப் பாளையம் அணையில் 7 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிக அளவு தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று முன் தினம் நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 675 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அப்போது அணையில் 11 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

    பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 553 கன அடி நீர்வரத்து இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து அணையின் நீர்மட்டம் 13 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று பகலில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகு களில் வெளியேற்றப்பட்டது. 

    • ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.
    • இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட ங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.

    நேற்று காலை 6 மணியளவில் அணையில் 2. 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நேற்று பகலில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. படிப்படியாக மாலையில் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி நீர்வரத்து இருந்தது. 450 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டி.டி.எஸ். உப்புத் தன்மை 1800 ஆக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. அதிக அளவு வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் மதகுகளில் வெளியேற்றப்பட்டது.

    இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    ×