search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒபிஎஸ்"

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.
    • செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இப்போது இல்லை.

    ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.

    அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்காக ஓ.பி.எஸ். எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இதனால் எந்த வழியில் பயணிப்பது என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் திசை தெரியாமலேயே அவருடன் பயணித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் சிறப்பாக அமையவும், தனக்கு முன்னால் நிற்கும் தடைகள் தவிடு பொடியாகவும் குலதெய்வம் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்தான் தனது அரசியல் முடிவுகள் பலவற்றை அவர் எடுத்துள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகளின் போதும் குலதெய்வமான வனப் பேச்சியம்மனை வழிபட்டு விட்டுத்தான் தனது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார்.

    அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போதைய அரசியல் சூழல் சாதகமானதாக இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது?

    அரசியல் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்வது? என்பது போன்ற எந்த முடிவுகளையும் அவரால் எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அதிகாரப்பூர்வமான ஒரு கட்சி அவரிடம் இல்லை. எனவே அரசியல் களத்தில் தடுமாற்றமான நிலையிலேயே ஓ.பி.எஸ். உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாய முடிவு செய்து உள்ள ஓ.பி.எஸ். தாமாகவே முன்வந்து பா.ஜனதா ஆத ரவு கோஷத்தை எழுப்பி வருகிறார். ஆனால் பா.ஜ னதா தலைவர்களின்

    காதுகளுக்கு போய் இன்னும் அது எட்டாமலேயே உள்ளது.

    இதனால் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமா? இல்லை அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுமா? என்பதும் மிகப் பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது.

    இதற்கெல்லாம் விடை காணும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் குலதெய்வ கோவிலான வனப் பேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து ஓ.பி.எஸ். பூஜைகளை செய்து உள்ளார். அப்போது கோவிலில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

    அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ.பி.எஸ். குலதெய்வ வழிபாடு அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன்.

    திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் சென்னையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    தமிழக நலனை நினைத்தே எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தினார்கள். மக்களுக்கு எல்லா விஷயங்களை எம்ஜிஆர் நல்லபடியாக செய்தார். ஜெயலலிதாவும் அவரது பாதையில் நல்லது செய்து வந்தார். அதன் பின்னர் ஒபிஎஸ் வந்தார். அதற்கு பிறகு எடப்பாடி வந்தார். திருஷ்டி பரிகாரம் போல் கட்சிக்கு சோதனை வந்துள்ளது. அதிமுகவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். நானும் அதையே சொல்லி வருகிறேன். எம்ஜிஆர் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன். எல்லாரும் ஒன்று சேருவார்கள். எல்லாம் நல்லபடியாக வரும். கொஞ்ச காலம் பிடிக்கும்.

    மீண்டும் எல்லாரும் ஒன்றுபட்டு பழையபடி இந்த கட்சி பலம் பெற நானும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இதற்காக முறையாக கட்சியில் இணைந்து செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×