search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை"

    • ஒட்டன்சத்திரத்தில் திங்க ள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • கட்டணமாக ரூ.20 நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு திடீரென ரூ.200 வசூலிக்க தொடங்கினர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திங்க ள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், நத்தம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவ சாயிகள் கால்நடைகளை இங்கு கொண்டு வருகின்ற னர்.

    கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநி லங்களில் இருந்து வியாபாரி கள் மாடுகளை வாங்கு வதற்காக வருகின்றனர். இதற்கு கட்டணமாக ரூ.20 நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு திடீரென ரூ.200 வசூலிக்க தொடங்கி னர். அதாவது ஒரு மாடு விற்பனை செய்யவும், வாங்கவும் என தனித்தனியாக ரூ.200 செலுத்த வேண்டும். இதன்மூலம் ரூ.400 வருமானம் கிடை த்தது.

    தற்போது ஈேராட்டில் இருந்த மாட்டுச்சந்தை திருப்பூருக்கு மாற்றப்பட்டது. அங்கு ரூ.20 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயி கள், வியாபாரிகள் அங்கு சென்று வருகின்றனர்.

    இதனால் கலகலப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களையிழந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,

    ஒரு மாட்டிற்கு ரூ.200 வசூல் செய்கின்றனர். அதுவும் வாங்குபவரிடம் ரூ.200, விற்பனை செய்பவரி டம் ரூ.200 என்பதால் பெரும்பாலான வியாபாரி கள் , விவசாயிகள் சந்தைக்கு வர தயங்குகின்றனர். கடந்த பொங்கல் பண்டிகை யின்போது அதிகளவு வியாபாரிகள் வந்தனர். தற்போது குறைந்த அளவே வந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ரூ.1½ லட்சத்துக்கு விற்கப்பட்ட காளை தற்போது ரூ.90 ஆயிரம் முதல் விலைகே ட்கப்படுகிறது.

    எனவே கட்டணத்தை குறைத்தால் மட்டுமே அதிகளவில் வியாபாரிகள் வருவார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×