search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசாவில் நிலச்சரிவு"

    டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #TitliCyclone #OdishaRain #Landslide
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கஜபதி மாவட்டம் பாரகாரா கிராமத்தில் நேற்று இடைவிடாமல் மழைபெய்ததால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.



    நிலச்சரிவு நடந்த பகுதியில் மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட உள்ளார். #TitliCyclone #OdishaRain #Landslide
    ×