search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு"

    • ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    தருமபுரி,

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக நீர் வருது அதிகரிப்பு இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகா காவிரி நீர் பிடிப்பதிலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறையும் விதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 43 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள சினி அருவி, மெயின் அருவி, ஐவர்பானி ஆகிய அருவிகளில் தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    மேலும் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசில் ஓட்டிகள், சமையலர்கள், உள்ளிட்டோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் வெள்ள அபாய எச்சரிக்கை கட்டுப்பட்டால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ×