search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2018. பாகிஸ்தான்-ஆங்காங்"

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, அனுபவமற்ற ஆங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது. #PAKvHK #AsiaCup2018
    துபாய்:

    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 137 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்திடம் படுதோல்வி அடைந்தது.

    ஆசிய கோப்பை போட்டியின் 2-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் சர்ப்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் - அன்சூமான் ராத் தலைமையிலான ஆங்காங் அணிகள் மோதுகின்றன.

    வலுவான பாகிஸ்தானை சந்திப்பது அனுபவமற்ற ஆங்காங்குக்கு சவாலானதே. பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PAKvHK #AsiaCup2018
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பெனால்டி வழங்கிய கோபத்தில் நடுவரை திருடன் என்று செரீனா வில்லியம்ஸ் திட்டியுள்ளார். #USOpen #SerenaWilliams
    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார். அவர் கூறியதாவது:-

    நான் மோசடி எதுவும் செய்யவில்லை. பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று நான் பார்க்கவில்லை. நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது. வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன்.

    இவ்வாறு 36 வயதான செரீனா தெரிவித்தார்.

    இதற்கிடையே அவரது பயிற்சியாளர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தான் கொடுத்த சைகையை செரீனா பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். #USOpen #SerenaWilliams
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்த ஆடம் ஜம்பா சொந்த நாடு திரும்புவதால் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். #CPL
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.

    இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


    ஆடம் ஜம்பா

    2013-ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், நட்டிங்காம்ஷைர், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 சியாஸ் கார் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் கார் இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

    அந்த வகையில் சிக்வீல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் 2018 சியாஸ் கார் ஆகஸ்டு 6-ம் தேதி வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சில காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    2018 மாருதி சியாஸ் மாடல் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்று காட்சியளிக்கும் என்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முன்பக்கம் புதிய பம்ப்பர், மேம்படுத்தப்பட்ட கிரில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த செடான் மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள், பகலிலும் எரியும் எல்இடி மின்விளக்குகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டில் அதிகம் மாற்றப்படாமல் புதிதாக அலாய் வீல்கள் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    இதன் பின்புறம் புதிய டெயில் லைட் கிளஸ்டர், அழகிய எல்இடி உள்ளிட்டவை கொண்டிருக்கும் என்றும் தற்போதைய மாடலை விட அழகிய ஸ்போர்ட் தோற்றம் பெறும் என கூறப்படுகிறது. 2018 சியாஸ் மாடலின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி மரத்தாலான டேஷ்போர்டு, 7 இனஅச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது.

    சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    இதன் 1.5 லிட்டர் யூனிட் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருதி நிறுவனத்தின் 2018 எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் புதிய காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் தனது 2018 எர்டிகா மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. புத்தம் புதிய 2018 எர்டிகா ஏற்கனவே இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய சோதனைகளின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் 2018 எர்டிகா பெட்ரோல் வேரியன்ட்களில் 4-ஸ்பீடு டார்கியூ கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய வேரியன்ட்களில் 1.5 லிட்டர் K-சீரிஸ் மோட்டார் வழங்கப்படுகிறது.

    இதன் டீசல் மோட்டார் முற்றிலும் புதிய யூனிட் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 1.5 லிட்டர் யூனிட் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசல் மோட்டார் 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினை விட அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஃபியாட் 1.3 லிட்டர் இன்ஜின் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.


    புகைப்படம் நன்றி: Kartik Jetly

    பெரிய டிஸ்ப்ளேஸ்மென்ட் மற்றும் கூடுதல் செயல்திறன் வழங்கும் என்பதால் எர்டிகா மாடலை தேர்வு செய்வோருக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும். இத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை 2018 எர்டிகா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய எர்டிகா மாடலை விட புதிய மாடல் சற்றே வித்தியாசப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2018 எர்டிகா மாடல் ஹார்டெக்ட் (HEARTECT) பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடலில் ஏபிஎஸ் சிஸ்டம், ட்வின் ஏர்பேக்ஸ் அனைத்து வேரியன்ட்களிலும் பொதுவான அம்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புறத்தில் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு பெறும் என கூறப்படுகிறது.

    இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் டாப்-என்ட் வேரின்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று துவங்க இருக்கும் நிலையில், நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018

    ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.



    ஐஓஎஸ் 12

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    வாட்ச் ஓஎஸ் 5

    வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    மேக் ஓஎஸ் 10.14

    மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.

    ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும்.  மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.


    டிவி ஓஎஸ் 12

    ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை  பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018Final #CSKvSRH
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் மாலை 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. டோனி டாஸ் சுண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டெய்ல்’ என அழைத்தார்.

    ஆனால் ‘ஹெட்’ விழ டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளனர்.



    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. கோஸ்வாமி, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் சர்மா
    ஐபிஎல் 11-வது சீசனின் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் இடையில் சுவாரஸ்யமான தகவல் புதைந்துள்ளது. #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனின் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றிகள் பெற்று 2-வது இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வெற்றிகள் பெற்று 3-வது இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 வெற்றிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தது.

    கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின.



    பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நான்கு அணிகளும் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளாகும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.



    சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011-ம் ஆண்டும் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



    தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    ×