search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா"

    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். #May22OruSambavam #TuticorinShootOut
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

    இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.



    இவர், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு “மே 22 ஒரு சம்பவம்“ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஹிம்சா புரடக்‌ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படமாக “மே 22 ஒரு சம்பவம்’’ உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுவிட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் பேசுகையில், ‘சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. தமிழகத்தின் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணம், கார்ப்பரேட். இதனால் கார்ப்பரேட் அரசியலை மையப்படுத்தி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும்’’ என்றார். #May22OruSambavam #SterliteProtest #TuticorinShootOut #SanthoshGopal

    இந்தியாவில் ஐடெல் நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ஹெச்.டி. பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் கொண்ட விலை குறைந்த மாடலாக அமைந்துள்ளது. #Smartphones


    சீனாவைச் சேர்ந்த டிரான்சிஷன் ஹோல்டிங்கின் ஐடெல் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

    ஐடெல் ஏ22, ஏ22 ப்ரோ மற்றும் ஏ45 என்ற பெயர்களில் அறிமுகமாகி இருக்கிறது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐடெல் ஏ45 மாடலில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஐடெல் ஏ22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், ஏ45 மாடலில் மீடியாடெக் MT6739 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஏ22 மற்ரும் ஏ45 மாடல்களில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் (கோ எடிஷன்) மற்றும் ஏ22 ப்ரோ மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



    ஐடெல் ஏ45 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WA 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - விஜிஏ இரண்டாவது கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2700 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    ஐடெல் ஏ22 / ஏ22 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5-இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்
    - அட்ரினோ 304 GPU
    - 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி - ஏ22
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி - ஏ22 ப்ரோ
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) - ஏ22
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ - ஏ22 ப்ரோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஐடெல் ஏ45 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஆந்த்ராசைட் கிரே மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஐடெல் ஏ45 விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் ஏ22 மாடல் ஸ்பேஸ் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஐடெல் ஏ22 ப்ரோ போர்டாக்ஸ் ரெட், ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு உடனடி கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    ×