search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎப்எஸ் அதிகாரி"

    ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    1982 பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியான பங்கஜ் சரண் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கெய்ரோ, அமெரிக்காவிலும் தூதரக அதிகாரியாக பணியாற்றிய இவர் தற்போது ரஷ்யாவுக்கான இந்திய தூதராக உள்ளார். இந்நிலையில், பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே, இரண்டு முறை பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பங்கஜ் சரண் இரண்டாண்டுகள் இந்த புதிய பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜிந்திர குமார் கடந்த ஜனவரி மாதம் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில், மற்றொரு துணை ஆலோசகராக பங்கஜ் சரண் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×