search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்றுமதி நிறுவனம்"

    • பிரின்டிங் நிறுவனம் துணியில் பிரின்டிங் செய்துகொடுத்துள்ளது.
    • பிரின்டிங் கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம் கருவம்பாளையம் பிரின்டிங் நிறுவனத்துக்கு ஜாப்ஒர்க் ஆர்டர் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பிரின்டிங் நிறுவனம் துணியில் பிரின்டிங் செய்துகொடுத்துள்ளது.இந்நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை வழங்க மறுப்பதாக ஏற்றுமதி நிறுவனம் மீது, பிரின்டிங் நிறுவனம் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.

    இதுகுறித்து ஆர்பிட்ரேசன் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

    பிரின்டிங் கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எவ்வித விவரமும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி, ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் மீத தொகை ஒரு லட்சம் ரூபாயை வழங்க மறுப்பதாக பிரின்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.இது ஒரு புதுமையான மற்றும் சிக்கல் நிறைந்த வழக்கு. ஆவணங்களை தணிக்கை செய்து, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலாளர்கள் நிர்ணயிக்கும் ஜாப் ஒர்க் கட்டண விவரங்கள் குறித்து ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவன உரிமையாளர்கள் தவறாமல் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

    • ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அங்கு பணியாற்றி வந்த 3 குடும்பங்களை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 6 பேர் அவிநாசிக்கு தப்பி வந்தனர்.

    நாம் தமிழர்கட்சியினர், உணவு கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும்திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,கொத்தடிமைகளாக நாங்கள் அங்கு இருந்தோம். வேலையில் சேர்ந்த போது கூறியபடி, தினக்கூலி வழங்கவில்லை.வீட்டை பூட்டி வெளியே நிறுத்தி கொடுமை செய்தனர். மேலும் 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.அவர்களையும் மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    ×