search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏட்டு மீது தாக்குதல்"

    • 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • திருவிழாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார்.

    சம்பவத்தன்று இவர் முடீஸ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

    கோவிலில் நள்ளிரவு பன்றி குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கக்கன்காலனியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 28), அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மோதிக்கொண்டனர்.

    இதனை பார்த்த பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சுரேஷ்குமார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சட்டையை பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் தாக்கினர்.

    இது குறித்து போலீஸ் ஏட்டு சுரேஷ்குமார் முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுவை தாக்கிய தினேஷ்குமார், கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர்.
    • தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சின்னராஜ், அவர் சம்பவத்தன்று இரவு ஏட்டு திருநாவுக்கரசுடன் குனியமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது கோவைப்புதூர் ஏ மைதானத்தில் தகராறு நடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் எட்டு திருநாவுக்கரசுடன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் மீது மோத வந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    ஆனால் ஏட்டு திருநாவுக்கரசு மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறியதால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். காலில் படுகாயம் அடைந்த ஏட்டு திருநாவுக்கரசை மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடந்துள்ளதும், அதில் தாக்கப்பட்ட ஒரு மாணவரின் நண்பர்கள், இரவு சம்பவ இடத்தில் மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அதனைக் வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    ×