search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.கே.15"

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய ரக வாகனம் வழங்கப்பட உள்ளது.
    • அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய ங்களுக்கு நவீன உபகர ணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் உடனு க்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லும் வகையில் அதிநவீன வாகன ங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை பெரிய நகர பகுதியாகும். காரணம் இங்குதான் ஏராளமான தொழிற்சா லைகள் இயங்கி வருகின்றன.

    இதில் பெருந்துறை சிப்காட்டில் பல்வேறு ரசாயனம் மற்றும் உற்பத்தி தொழிற்சா லைகள் இருப்பதால் இங்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக அணைக்க தற்போது கூடுதலாக நவீன ரக சிறிய வாகனம் அரசு சார்பில் வழங்கப்ப ட்டுள்ளது.

    இந்த புதிய வாகனத்தில் 300 லிட்டர் தண்ணீர், 100 லிட்டர் நுரை கலவை, 2 பம்ப் மற்றும் வாகனத்தின் டிரைவர் கேபின் முழுவதும் ஏசி வசதியுடன் அமைக்க ப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் ஓடும்போதே வீரர்கள் மூலம் தீயை அணைக்கும் வசதி உள்ளது. அதுவும் சோதனை செ ய்தபோது வெற்றியடைந்தது.

    இதேப்போல் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய ரக வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் சில வகையான உதிரி பாகங்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை
    • வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்ப டுவதாக, வாழப்பாடி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்த பாரத் (வயது 43) என்பவர், அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.15,000 மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.நாட்டு வெடிகளை இவரே தயாரித்து பதித்து வைத்து விற்பனை செய்து வந்தாரா? அல்லது வேறு யாரிடமாவது இருந்து வாங்கி விற்பனை செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.

    அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

    • பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • ஆர்வத்துடன் வந்து செலுத்தி கொண்டனர்

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
    • உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    புதுக்கோட்டை:

    விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்

    • விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
    • உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    புதுக்கோட்டை:

    விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஹீரோ படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். #HERO #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

    இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். `ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.



    இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் - விவேக் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HERO #Sivakarthikeyan #PSMithran #Vivekh

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #HERO #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜையை படக்குழுவினர் சென்னையில் நேற்று நடத்தினர். இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்தனர். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதி விருதுகள் பெற்று இருக்கிறேன். குற்றமே தண்டனை படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை எழுதி உள்ளேன். பல நாவல்களும் எழுதி இருக்கிறேன். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்.



    படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே பதிவு செய்துள்ளோம். ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

    இந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். #HERO #Sivakarthikeyan #AnandAnnamalai #VijayDevarakonda

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் - அர்ஜூன் - கல்யாணி பிரியதர்ஷன் - இவானா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SK15 #HERO #SK15ShootFromToday
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர். 

    இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த த்ரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவானாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    ×