search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்துத்"

    • நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த தேர்வில் 18 ஆயிரத்து 627 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி தலைமையில், மாவட்ட கலெக்டர் .கார்மேகம் முன்னிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்வு வருகிற 15, 16-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை சேலம் மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில், 18,627 தேர்வர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம், சுகாதார வசதிகள் மற்றும் தேர்வு மையங்களில் கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திடவும், தேர்வு நாளான்று தேர்வு மையம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் தேர்வாளர்களுக்கு வசதியாக அவ்வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி செல்லவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் மையத்தில் தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் நடமாடும் வாகனத்தினை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வாளர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வறைக்கு வருகை புரிந்திட வேண்டும் எனவும், தேர்விற்குறிய வழிகாட்டு நெரிமுறைகளில் தெரிவித்துள்ள படி இத்தேர்வினை முழு கவனத்துடன் நடத்திட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீ ஸ் சூப்பிரண்டு அபிநவ், சேலம் வணிக நீதிமன்ற நீதிபதி ஏ.தீபா, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா , வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட தீயணைப்பு துறை, கல்லூரி மற்றும் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்திய அரசின் மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.
    • மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    சேலம்:

    இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.சி) காலியாக உள்ள 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதனுடன் கனிமவளத்துறையில் 9 நிர்வாக அதிகாரி, டி.ஆர்.டி.ஓ. துறையில் 8 முதுநிலை நிர்வாக அதிகாரி, மீன்வளத்துறையில் 1 நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதியை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேர்வு நடைபெற உள்ளது. அன்று மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் பொதுத்திறன் அடிப்படையில் கேட்கப்படும். 'பகுதி - அ' பிரிவில் ஆங்கில அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் வேலை தொடர்பாகவும், 'பகுதி - ஆ' பிரிவில் மனித வள மேம்பாடு, மார்க்கெட்டிங் மேலாண்மை, அக்கவுண்ட்டிங் மற்றும் நிதி மேலாண்மை, தகவல் தொடர்பான சட்டம், பொது அறிவியல், கம்ப்யூட்டர் அறிவு உள்ளிட்டவை சம்பந்தமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.

    ஹால்டிக்கெட்

    முன்னதாக தேர்வர்கள் தேர்வு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். 2.20 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2.20 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் கேட் பூட்டப்படும். மின்னணு நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்ய வருகிற 17-ந்தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும் என தேர்வர்களை யூ.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

    ×