என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எருமை கிடா வெட்டி பலி"
- ஆத்தூர் சின்ன வண்டி காளியம்மனுக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
- சேவல், பன்றி மற்றும் எருமை கெடா வெட்டி, பலி கொடுத்து, அதன் உடலை புதைத்து, அம்மனுக்கு பூஜை செய்தனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெரு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சின்ன வண்டி காளியம்மன் கோவில். இந்த கோவில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அன்று இரவு அக்கரைப்பட்டியில் இருந்து அம்மனை அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் சின்ன வண்டி காளியம்மனுக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், மாலையில் சின்ன வண்டி காளியம்மனுக்கு கோவில் முன்பு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, அதன் அருகே சேவல், பன்றி மற்றும் எருமை கெடா வெட்டி, பலி கொடுத்து, அதன் உடலை புதைத்து, அம்மனுக்கு பூஜை செய்தனர்.
பின்னர், மாலை அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலை சென்றது. இத்திருவிழாவில் ஆத்தூர், நந்தனார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்