என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எரித்து கொலை"
- ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.
அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.
ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.
- விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
- தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக் கோட்டை வட்டம் தளி அருகே ஒசபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தைல மரத்தோப்பில், உடல் எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள மரத்தின் அருகே, பாலித்தின் பையில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இந்த கிராமம், கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், கொலையானவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கர்நாடக மாநில எல்லையில் உள்ள போலீஸ் நிலை யங்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த லூர்து சாமி மகன் சுரேஷ்பாபு என்கிற அலுமினிய சாமி (45) என்ற தொழிலாளி, மாயமானதாகவும், பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் எதற்காக கொலை செய் யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
- அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
- மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் குமுதா, வருவாய் அலுவலர் ராஜக்குமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வை யிட்டனர்.
அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.
இதனால் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரக்காணம் அருகே கணவன் மனைவியை அடித்து எரித்து கொன்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 62). இவரது மனைவி ஞானம்மாள் (60). இவர் நேற்று மாலை வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்து கிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் கணவர் செல்லக்கண்ணு போலீசாரிடம் தெரிவிக்கையுல் தனது மனைவியுடன் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த ஞானம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை கொண்டார் என கூறினார்.
இதையடுத்து போலீசார் ஞானம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனக செட்டிக்கு ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனையில், ஞான ம்மாகள் அடித்து கொலை செய்ய ப்ப ட்டு எரிக்க ப்பட்டு ள்ளது தெரிய வந்தது. இதனை த்தொட ர்ந்து ஞானம்மா ளின் கணவர் செல்லக்கண்ணுவை போலீஸ் நிலையத்தில் வைத்து மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை.
- 3 பேர் சிக்கினர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமம் அருகே குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் எரிந்த நிலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை செய்தனர்.
எரிந்த நிலையில் டி-ஷர்ட்டும் மற்றும் கடை சாவி இருசக்கர வாகன சாவி ஆகியவை அங்கு கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாமல் காணாமல் போனது தெரியவந்தது.
போலீசார் இதுகுறித்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விஜயை கொலை செய்துவிட்டு அவருடைய இரு சக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசியதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை கொண்டு இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில் கார் வாங்குவதில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விஜய்யை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்